எரிபொருள் தட்டுப்பாட்டின் எதிரொலி! மின்வெட்டு ஏற்படும் நாளை அறிவித்தார் அமைச்சர்
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் மின்வெட்டு நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியங்கள் உண்டு என இலங்கை மின்சாரசபையின் பதில் பொதுமேலதிகாரி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மின் வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டால் அது குறித்து முன்கூட்டியே மக்களுக்கு அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
போதியளவு எரிபொருள் இன்மையினால் இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது. களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தில் ஐந்தரை நாட்களுக்கு போதுமானளவு எரிபொருளே காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
சபுகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்தின் எரிபொருட்கள் நேற்று பகலுடன் தீர்ந்து போனது என அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்றைய தினத்தைப் போன்றே இன்றைய தினத்திலும் மின்வெட்டு இருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை எரிபொருள் கிடைக்கப் பெற்றால் செவ்வாய்க்கிழமை மின்வெட்டு ஏற்படாது என அவர் தெரிவித்துள்ளார்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 10 மணி நேரம் முன்
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri