புலம்பெயர் நாடுகளில் இருந்து வருபவர்கள் கொழும்பில் நாட்களை செலவிட வேண்டாம்! பகிரங்க கோரிக்கை (Video)
இலங்கையின் பண்டைய வரலாற்று சான்றுகளில் தமிழர்களின் மரபுகளும், வரலாற்று சான்றுகளும் தற்போது பெரும் சவாலுக்கு உள்ளாகியுள்ளன.
இந்நிலையில் இலங்கையை ஆண்ட சோழர்களின் வரலாறானது தமிழர் பாரம்பரியத்தின் பல்வேறு அடையாளங்களை இந்த நாட்டில் உருவாக்கியுள்ளது.
மொழி, கலாச்சாரம் பண்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை, கட்டடக்கலைகள் மூலம் எதிர்கால சந்ததியினருக்கு விட்டு சென்றுள்ளனர் சோழர்கள்.
அவ்வாறு இலங்கையில் சோழர் ஆட்சி காலத்தில் பொலன்னறுவையில் கட்டப்பட்ட இரண்டாம் சிவ ஆலயமும் இவ்வாறானதொரு நிலையை எதிர்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே புலம்பெயர் நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருபவர்கள் கொழும்பில் பொருட்களை வாங்குவதற்கும் கொழும்பை சுற்றி பார்ப்பதற்கும் மூன்று நாட்களை செலவிடுவதை நிறுத்திவிட்டு எமது வரலாற்றை தேடி செல்லுங்கள் எமது வரலாற்றை பாதுகாப்பதற்கு வழிவகுங்கள் என பகிரங்கமாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சிவ ஆலயத்தின் கவனிப்பாரற்ற நிலையையும், அது தொடர்பான வரலாற்று விபரங்களையும் தொகுத்து வருகிறது கீழ்வரும் காணொளி…
அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! 19 மணி நேரம் முன்
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்காவிட்டால்.,ஈரானுக்கு 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப் News Lankasri