இலங்கையில் உள்ள நான்கு நகரங்களினால் ஏற்படும் பாதிப்பு
இலங்கையின் நான்கு நகரங்களில் வளி மாசடைதல் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆய்வு நிறுவகம் வெளியிட்ட தகவலின்படி, கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலேயே இவ்வாறு வளி மாசடைதல் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடும் காற்று வீசுவதால், வளி மாசடைவதற்கான காரணமாக அமைந்துள்ளதாகவும், மின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில், மின்பிறப்பாக்கிகள் அதிகமாக பயன்படுத்தப்படுவதாலும் வளி மாசடைதல் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு நிறுவகத்தின் சுற்றாடல் பிரிவு பணிப்பாளர் சரத் பிரேமசிறி குறிப்பிட்டுள்ளார்.