செம்மணி புதைகுழி மூலமான அரசியல் எமக்கு வேண்டாம்! மலையகத்தில் இருந்து ஒலித்த குரல்!
சமீப காலமாக உலகலாவிய ரீதியில் பேசு பொருளாகமாறியுள்ள செம்மணி புதைக்குழி மூலம் எம் தமிழ் இன மக்களுக்கு தீர்வு வேண்டுமே தவிர பரிதாபங்கள் இல்லை என ஜனநாயக இளைஞர் காங்கிரஸின் நுவரெலியா மாவட்ட தவிசாளர் லதுர்ஷான் வெள்ளசாமி தெரிவித்துள்ளார்.
யுத்த காலத்தில் இதுவரை காலமும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியோ, தீர்வோ கிடைக்கப்படாத நிலையில் செம்மணி புதைக்குழியானது தமிழ் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பது வேதனையளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
செம்மணி புதைகுழி
இந்நிலையில் செம்மணி புதைகுழி தொடர்பாக அரசாங்கம் முழு கவனத்தை செலுத்துவதன் மூலம் செம்மணி புதைகுழிக்கான நிரந்தர தீர்வை பெற முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும், வடக்கு கிழக்கு மற்றும் இலங்கை வாழ் அனைத்து தமிழர்களின் உரிமைக்காக மலையக இளைஞர் என்றும் கைகோர்ப்போம் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 17 மணி நேரம் முன்
வெளியே போக சொன்ன சேது, அதிர்ச்சி முடிவு எடுத்த தமிழ்ச்செல்வி... சின்ன மருமகள் சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam