கோவிட் நிதி தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை - ஜேவிபி குற்றச்சாட்டு
பிரேசிலிய மாறுபாட்டைத் தவிர அனைத்து கோவிட் வகைகளும் இலங்கைக்குள் நுழைந்தமைக்கு அரசாங்கத்தின் கோவிட் தடுப்பு பொறிமுறையின் தோல்வியே காரணம் என்று ஜேவிபி குற்றம் சுமத்தியுள்ளது.
அத்துடன் தொற்றுநோயைத் தடுக்கும் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களின் ஆலோசனையைக் கவனிக்காத அரசாங்கத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகள் காரணமாகவே இன்று அதற்கான விலைகொடுக்கப்படுகிறது என்று ஜேவிபியின் செயலாளர் தில்வின் சில்வா செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது, இது மருத்துவமனை கொள்திறனை மீறுகிறது. இந்தநிலையில் நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பதை விட, மருத்துவமனை படுக்கை திறனை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
யாரும் சாலையில் இறந்துபோக அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று இராணுவத்தளபதி கூறியிருந்தார். அனைவருக்கும் சிகிச்சைக்காக ஒரு படுக்கை வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
எனினும் பிரச்சினை சாதாரண படுக்கைகள் அல்ல, ஆனால் அதிதீவிர சிகிச்சைப்பிரிவுகளுக்கான சிறப்புப் படுக்கைகளாகும்.
நிலைமை தீவிரமாக இருப்பதால் அரசாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே பணக்காரர்களிடம் நன்கொடைகளை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். எனில் கோவிட் நிதிக்கு என்பதை அறிந்துகொள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர்.
அவர்கள் சுனாமி நிதிகளை மோசடி செய்தனர். இந்தநிலையில் கோவிட் நிதி தொடர்பாக
இப்போது எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும் ஜேவிபியின் செயலாளர் தில்வின்
சில்வா தெரிவித்துள்ளார்.