அனைவருக்கும் இன்பமும் மகிழ்ச்சியும் பெருகட்டும்! -சாள்ஸ் நிர்மலநாதன் புத்தாண்டு வாழ்த்து
பிறக்கும் தமிழ் சித்திரை புதுவருடத்தில் எமது தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் ஆண்டாகவும் இன்பமும் மகிழ்ச்சியும் பெருகும் புதிய ஆண்டாகவும் மலரவேண்டும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உலகத்தை பெரும் அச்சத்தில் ஆழ்த்திக்கொண்டுள்ள கோவிட் வைரஸ் தொற்று நோய் மக்களை விட்டு முற்றாக அழிந்து போகவேண்டும்.
தமிழ் மக்கள் என்றும் இல்லாதவாறு தற்போது கடுமையான இராணுவ நெருக்கடிக்குள் வாழ்ந்துவரும் தற்போதைய சூழ்நிலையில் எமது மக்களின் நீண்ட கால நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.
அதற்காகத் தொடர்ந்தும் எனது குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டே இருக்கும்.
சூழ்ச்சிகள் தோற்று
நியாயமான எமது போராட்டம் வெற்றி பெற வேண்டும்.
அனைவரின் வாழ்வில் மகிழ்ச்சி நிறையட்டும்!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார்.
சூரிய கிரகணத்தில் துல்லியமாக சாகசம் செய்த ஒலிம்பிக் ஸ்கேட்போர்டு வீரர்! படு வைரலாகும் வீடியோ Manithan
அந்த வலியும், வேதனையும்.. காதல் முறிவு மற்றும் காதலரால் செய்யப்பட்ட துன்புறுத்தல்களை கூறிய நடிகை அனுபமா Cineulagam
வாடகைக்கு வீடு பார்க்க சென்ற தம்பதி: கடித்து குதறிய பிட்புல் நாய்: அதிர்ச்சியூட்டும் காட்சி News Lankasri
விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு? Cineulagam