14 ஆண்டு சிறைவாசத்தின் பின் விடுதலையான கைதி - தமிழீழ போருக்கு உதவி புரிந்தாரா..! அவரே வெளியிடும் தகவல்
சில தடவை அடியும் வாங்க வேண்டிய சூழ்நிலைகளும் இருந்ததாக 14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து விடுதலையான சதீஸ் தனது வேதனைகளை புன்னகையால் மறைத்தப்படி தெரிவித்தார்.
சுயாதீன ஊடகவியலாளரும் எழுத்தாளருமான, அரசியல் கைதி விவேகானந்தனூர் சதீஸ் கடந்த மாதம் (17.03.2023) பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
கடந்த 2008ஆம் ஆண்டு பணியின் நிமித்தம் கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த போது, வவுனியா - தேக்கவத்தை சோதனைச் சாவடியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சதீஸ்குமாருக்கு எதிராக, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு உதவியதாக குற்றப்பத்திரம் தயாரித்து வவுனியா மேல் நீதிமன்றில் அவசரகால சட்டவிதியின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது.
குறித்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம், 2011ஆம் ஆண்டு, சதீஸ்குமார்க்கு ஆயுட்கால சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. இந்த நிலையில் விடுதலையாகியுள்ள அவர் லங்காசிறி செய்தி செவைக்கு வழங்கிய விசேட செவ்வியில் பல விடயங்களை பகிர்ந்து கொண்டார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
