பொது மக்களுக்கு இலங்கை பொலிஸாரின் அவசர எச்சரிக்கை
பணம், தங்கம் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்கள் திருட்டு, கடத்தல், மற்றும் பலவந்தம் ஆகியவற்றின் மூலம் கொள்ளையடிக்கக் குற்றவாளிகள் பயன்படுத்தும் முறைகள் குறித்து மக்களை எச்சரித்து இலங்கை பொலிஸ் ஒரு பொது ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
இதுபோன்ற குற்றங்களுக்குப் பலியாகாமல் இருக்க, விழிப்புடன் இருக்குமாறு அந்த அறிவுரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
விழிப்புடன் செயல்படுமாறு...
பொதுப் பாதுகாப்பைப் பேணுவதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் இருந்தபோதிலும், அலட்சியம் அல்லது விழிப்புணர்வின்மை காரணமாகப் பல கடுமையான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகக் பொலிஸ் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
சமீபத்தில் கொக்கடிச்சோலையில் இரண்டு பெண்கள் கடத்தப்பட்டு, போதை மருந்து கொடுக்கப்பட்டு, நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்களில், ஒருவர் கொலை செய்யப்பட்டதும், மற்றொருவர் நுழையில் தப்பியதும் இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

இந்தச் சம்பவத்தையும் அதுபோன்ற சம்பவங்களையும் பகுப்பாய்வு செய்து, பின்வரும் சம்பவங்களுக்கு கடுமையான கவனம் செலுத்தி, அன்றாட வாழ்வில் விழிப்புடன் செயல்படுமாறு இலங்கை பொலிஸ் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
- குற்றவாளிகள் பொது இடங்களிலோ அல்லது பொதுப் போக்குவரத்திலோ மக்களை மிகவும் நட்பான முறையில் அணுகுகிறார்கள்.
- நம்பிக்கையைப் பெறுவதற்காக அவர்கள் நெருங்கிய நண்பர்கள் போல் நடிக்கிறார்கள். அவர்கள் இனிப்புகள், பிற உணவுகள், பானங்கள் அல்லது போதை தரும் பொருட்கள் கலந்த தண்ணீரைக் கொடுக்கிறார்கள்.
- அவர்கள் தனிநபர்களை அடக்குவதற்காக விஷத் தெளிப்பான்கள், மிளகாய்த் தூள் அல்லது அது போன்ற பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள்.
- நீங்கள் பாதிக்கப்பட்டவராக ஆவதைத் தவிர்க்க, இதுபோன்ற சூழ்நிலைகளில் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
- நெடுஞ்சாலைகளிலோ அல்லது பொது இடங்களிலோ முன்பின் தெரியாதவர்கள் வழங்கும் போக்குவரத்து வசதிகளை ஏற்றுக்கொள்ளும்போது கவனமாக இருங்கள்.
- எந்தச் சூழ்நிலையிலும் முன்பின் தெரியாதவர்கள் கொடுக்கும் உணவையோ பானங்களையோ உட்கொள்ளாதீர்கள்.
- யாரேனும் நபரோ அல்லது குழுவோ உங்களுக்கு அருகில் தேவையில்லாமல் வர முயன்றால் எச்சரிக்கையாக இருங்கள்.
- உங்கள் பணம், தங்கம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை மிகுந்த கவனத்துடன் கையாளுங்கள்.
- சந்தேகத்திற்கிடமான நபர், வாகனம் அல்லது குற்றம் நடப்பதாகத் தோன்றும் இடத்தை நீங்கள் கண்டால், உடனடியாக 119, 118 என்ற எண்களுக்கோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் அதிகாரிக்கோ அல்லது பொதுமகனுக்கோ தகவல் தெரிவிக்கவும்.
குற்றங்களைத் தடுப்பதற்கு இந்த எச்சரிக்கைகளைச் சரியான முறையில் புரிந்துகொண்டு விவேகத்துடன் செயல்படுவது அவசியம் என இலங்கை பொலிஸ் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
உக்ரைன் வான் பரப்பிற்குள் பட்டப்பகலில் நுழைந்த 400 ட்ரோன்கள்: புதிய உத்தியை கையில் எடுக்கும் ரஷ்யா News Lankasri
திருட்டு விஷயம் தெரிந்ததும் வானதி சொன்ன விஷயம், நிலா சோழனுக்கு சொன்ன சந்தோஷ செய்தி... அய்யனார் துணை சீரியல் Cineulagam
கார்க் தீவுக்கு குறி! முக்கிய வான்வழி படைத் தளபதிகள் மத்திய கிழக்கிற்கு அனுப்பும் அமெரிக்கா News Lankasri
ஆலிவர் பின்னால் இருக்கும் அந்த நபர் இவர்தானா, அடுத்த வில்லன் ரெடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam