சிறுமியின் கொலையில் மர்மம் - ரிஷாட்டின் மனைவியிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு
வீட்டில் பணியாற்றிய சிறுமியின் மரணம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவியிடம் தற்போது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்கு சென்றுள்ள பொரளை பொலிஸை சேர்ந்த விசேட குழு ஒன்று அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹட்டன், டயகம பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ஒருவர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணி புரிந்து வந்த நிலையில் கடந்த தினம் உயிரழந்திருந்தார்.
குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாடாளவிய ரீதியில் பல்வேறு தரப்பினரும் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் குறித்த மரணம் தொடர்பில் பொலிஸாரினால் பல்வேறு கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 4 மணி நேரம் முன்
'சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது'.. நடிகை சைத்ரா அச்சரின் கிளாமர் புகைப்படங்கள் Cineulagam
போராட்டத்திற்கு பிறகு தமிழுக்கு பிறந்த குழந்தை, ஆனால் எதிர்ப்பாரா திருப்பங்களுடன்... சின்ன மருமகள் சீரியல் புரொமோ Cineulagam