இலங்கையில் மர்மமான முறையில் உயிரிழந்த பிரித்தானிய பிரஜை! பொலிஸார் மீட்டுள்ள கடிதங்கள்
இலங்கையின் தென் பகுதியில் வீடொன்றில் வசித்துவந்த பிரித்தானிய பிரஜை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஹபராதுவ தல்பே பகுதியில் உள்ள வீடொன்றில் வசித்து வந்த 55 வயதுடைய பெண்ணே தவறான முடிவின் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பெண்ணின் மரணத்திற்கான காரணம் இதுவரையில் வெளியாகாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பிரித்தானிய பிரஜை சடலமாக மீட்பு
இந்நிலையில், குறித்த பெண் உயிரிழப்பதற்கு முன்பாக தமது சொத்துக்கள் தொடர்பில் எழுதிய பல கடிதங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
உயிரிழந்த வெளிநாட்டவரின் பிரேத பரிசோதனை காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் நடைபெறவுள்ளதுடன், ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்