கர்தினாலின் குற்றச்சாட்டுக்களை நிராகரித்த பொலிஸார்
கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் குற்றச்சாட்டுக்களை பொலிஸார் நிராகரித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமையன்று வெளிநாட்டு வாழ் இலங்கையர்களுடன் மெய்நிகர் தொழில்நுட்பத்தின் ஊடாக கலந்து கொண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் குறித்து கர்தினால் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
தாக்குதல் குறித்த விசாரணைகளின் அடிப்படையில் உயர் நீதிமன்றில் 12 வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும், 42 சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய இவ்வாறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது என தெரிவிக்கின்றனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கர்தினால் வெளியிட்ட ஏழு விடயங்கள் தொடர்பில் பொலிஸார் விளக்கம் அளித்துள்ளனர்.
சாட்சியங்களின் அடிப்படையிலன்றி வெறும் கருத்துக்கள் அறிக்கைகளின் அடிப்படையில் குற்றச்சாட்டுக்களை சுமத்தி நடவடிக்கை எடுக்கப்பட முடியாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
மில்லியன் வீரர்களுடன்... ஈரான் விடுத்த மிரட்டல்: மீண்டும் 10 நாள் அவகாசம் அறிவித்த ட்ரம்ப் News Lankasri
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam