கர்தினாலின் குற்றச்சாட்டுக்களை நிராகரித்த பொலிஸார்
கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் குற்றச்சாட்டுக்களை பொலிஸார் நிராகரித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமையன்று வெளிநாட்டு வாழ் இலங்கையர்களுடன் மெய்நிகர் தொழில்நுட்பத்தின் ஊடாக கலந்து கொண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் குறித்து கர்தினால் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
தாக்குதல் குறித்த விசாரணைகளின் அடிப்படையில் உயர் நீதிமன்றில் 12 வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும், 42 சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய இவ்வாறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது என தெரிவிக்கின்றனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கர்தினால் வெளியிட்ட ஏழு விடயங்கள் தொடர்பில் பொலிஸார் விளக்கம் அளித்துள்ளனர்.
சாட்சியங்களின் அடிப்படையிலன்றி வெறும் கருத்துக்கள் அறிக்கைகளின் அடிப்படையில் குற்றச்சாட்டுக்களை சுமத்தி நடவடிக்கை எடுக்கப்பட முடியாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 13 மணி நேரம் முன்
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri