கர்தினாலின் குற்றச்சாட்டுக்களை நிராகரித்த பொலிஸார்
கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் குற்றச்சாட்டுக்களை பொலிஸார் நிராகரித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமையன்று வெளிநாட்டு வாழ் இலங்கையர்களுடன் மெய்நிகர் தொழில்நுட்பத்தின் ஊடாக கலந்து கொண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் குறித்து கர்தினால் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
தாக்குதல் குறித்த விசாரணைகளின் அடிப்படையில் உயர் நீதிமன்றில் 12 வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும், 42 சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய இவ்வாறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது என தெரிவிக்கின்றனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கர்தினால் வெளியிட்ட ஏழு விடயங்கள் தொடர்பில் பொலிஸார் விளக்கம் அளித்துள்ளனர்.
சாட்சியங்களின் அடிப்படையிலன்றி வெறும் கருத்துக்கள் அறிக்கைகளின் அடிப்படையில் குற்றச்சாட்டுக்களை சுமத்தி நடவடிக்கை எடுக்கப்பட முடியாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri