மாவீரர் வாரம் ஆரம்பித்துள்ள நிலையில் பொலிஸார் கெடுபிடி
தமிழ் மக்களின் விடுதலைக்காக வித்தாகிய வீரமறவர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் நேற்றையதினம் ஆரம்பித்துள்ள நிலையில் வவுனியாவின் குறிப்பிட்ட சில பகுதிகளில் பொலிஸார் விசேட பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாகக் கடந்த வருடங்களில் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்ட வவுனியா நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் தூபி மற்றும் வவுனியா குளத்தடி மற்றும் நகரின் முக்கிய சந்திகளில் பொலிஸார் விசேட கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொலிஸாரின் விண்ணப்பத்திற்கமைய மாவீரர்
தினத்தினை அனுஷ்டிப்பதற்கு வவுனியா நீதிமன்றம் 8 பேருக்குத் தடை உத்தரவு
வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.