லண்டனில் 12 வயது சிறுமி மாயம்! - பொது மக்களின் உதவியை கோரியுள்ள பொலிஸார்
லண்டனில் வசிக்கும் 12 வயது சிறுமி ஒருவர் காணாமல்போயுள்ளமை தொடர்பில் பொலிஸார் பொது மக்களின் உதவியை கோரியுள்ளனர்.
லண்டனில் உள்ள Slough என்ற பகுதியில் வசிக்கும் 12 வயது சிறுமியான லிலியனா ஹென்றி, நேற்று முன்தினம் காணாமல்போனார். தற்போது வரை அவர் எங்கிருக்கிறார்? என்ற தகவல் கிடைக்கவில்லை.
இந்நிலையில் இது குறித்து பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சிறுமியின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. இச்சிறுமி நேற்று முன்தினம் மாலையில் Slough என்ற பகுதியில் காணாமல்போயுள்ளார். மேலும், சுட்டன் பகுதியில், அவர் அடிக்கடி தென்பட்டதாக கூறப்படுகிறது.
எனவே, அவரை யாராவது பார்த்திருந்தால், தங்களிடம் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் ஜேசன் லீல்ஸ் கருத்து வெளியிடுகையில்,
“லிலியனா கடைசியாக பிற்பகல் 3 மணியளவில் காணப்பட்டார். எனினும், அதன் பின்னர் அவரை காணவில்லை. உள்ளூர் பகுதியில் தேடல் நடந்து கொண்டிருக்கிறது, நாங்கள் இப்போது பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளோம்.
லிலியனா தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் 101 அல்லது 43210458578 என்ற இலக்கத்தினை தொடர்புகொண்டு தெரிவிக்க முடியும். நாங்கள் லிலியனாவின் நலனில் அக்கறை கொண்டுள்ளோம்,
எனவே அவரை கண்டால் எங்களுக்கு தகவல் வழங்குங்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri