ஆளும் கட்சியின் 40 எம்.பிக்களுக்கு ஐ.தே.கட்சியின் அமைப்பாளர் பதவிகள்
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உட்பட சில கட்சிகளை சேர்ந்த சுமார் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஐக்கிய தேசியக்கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகள் வழங்கப்பட உள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுதந்திரக்கட்சி மற்றும் ஐ.மக்கள் சக்தியினருக்கும் அமைப்பாளர் பதவிகள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளை சேர்ந்த சுமார் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களே, ஐக்கிய தேசியக்கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகளை பெற்றுக்கொள்ள உள்ளனர்.
ஐக்கிய தேசியக்கட்சி அடுத்த தேர்தலை இலக்காக கொண்டு இவ்வாறு புதிய அமைப்பாளர்களை நியிக்க உள்ளது.
தொகுதி அமைப்பாளர் பதவிகளுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
ஐக்கிய தேசியக்கட்சியை மறுசீரமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே தொகுதி அமைப்பாளர்கள் பதவிகளுக்கான நேர்முக பரீட்சைகள் தற்போது நடத்தப்பட்டு வருகின்றன.
ஐக்கிய தேசியக்கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகளை கோரி இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.