உயிரை கையில் பிடித்து பயணம் செய்யும் சந்தன மடு மக்களின் அவலம் (Video)
மட்டக்களப்பு, செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சந்தன மடு ஆறு பகுதியில் இருக்கும் போக்குவரத்துக்கு பிரதானமான ஆற்றுப் பகுதியில் அதிகளவு நீர் செல்கின்ற காரணத்தினால் தங்களது உயிரை கையில் பிடித்து மக்கள் நீரில் கடந்து செல்கின்றனர்.
சுமார் ஒரு நாளைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் குறித்த ஆற்றை கடந்து தங்களது விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் குறித்த சந்தன மடு ஆற்று பகுதி பல ஆண்டு காலமாக இவ்வாறே காணப்படுகின்றது.
வரட்சியான காலப்பகுதியில் மக்கள் மண்மேடு ஊடாக நடந்து பிரயாணம் செய்வதும், காலநிலை மாற்றம் ஏற்படும்போது அதிகளவான நீர் குறித்த ஆற்றுப் பகுதியில் நிரம்புவதனால் மிகவும் சிரமத்துக்கு மத்தியில் தங்களது விவசாய நடவடிக்கைகளிளும், போக்குவரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக மணல் அகழ்வு மேற் கொள்ள இருந்த நடவடிக்கை மக்களின் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டிருந்தது.
இவ்வாறு இந்த மக்கள் அதிக நீர் பாய்கின்ற காரணத்தினால் தங்களது உயிரை கையில் பிடித்து ஈரளக் குளம் பகுதிக்குச் செல்கின்ற போதிலும் இன்றைய தினம் கூட சரிதவியல் திணைக்களத்தினால் குறித்த ஆற்றுப்பகுதியில் மண் வளத்தை சுரண்டுவதற்கு வெளி மாவட்டத்தினை சேர்ந்த மண் உரிம உரிமையாளர்களுடன் வழங்கப்பட்ட அனுமதியை பரிசோதனை செய்வதற்காக குறித்த இடத்திற்கு வந்திருந்தனர்.
மக்கள் நாளாந்தம் துன்பப்பட்டு உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பயணம் செய்கின்ற போதிலும் மண் மாபியாக்களின் அராஜக நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 6 மணி நேரம் முன்
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan