தீவிரவாதத்தை விதைத்தோம்: சர்ச்சையை ஏற்படுத்திய அமைச்சரின் பேச்சு-செய்திகளின் தொகுப்பு
“பாகிஸ்தானில் நாம் தீவிரவாதத்தை விதைத்தோம்” என பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் (Khawaja Muhammad Asif) அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசியுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை பாகிஸ்தானிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற வெடிகுண்டுத் தாக்குதலில் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 170 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தற்கொலைத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபான் எனப்படும் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் பேசும் போது, பாகிஸ்தானில் நாம் தீவிரவாதத்தை விதைத்தோம் என்று பேசியுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு,