கொழும்பை முடக்க பெருமளவு மக்களை ஒன்றிணைக்க நடவடிக்கை
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடும் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதிலும் உள்ள மக்களை எதிர்வரும் திங்கட்கிழமை தலைநகருக்கு வரவழைக்கவுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
தேர்தலை ஒத்திவைக்கும் அரசின் கீழ்த்தரமான திட்டம் தோற்கடிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைத்து பொதுச் செயற்பாட்டாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதியும் அரசாங்கமும் தாங்கள் தோற்றுப்போவதை அறிந்து தோல்வியைத் தவிர்க்க விரும்புவதால் தேர்தலை ஒத்திவைப்பதாக அவர் சுட்டியுள்ளார்.
மேலும், தேர்தலை நடத்தும் வரை பின்வாங்கப் போவதில்லை எனவும், தேர்தலை நடத்தாவிட்டால் நல்லதோ கெட்டதோ பிரச்சினையை தீர்க்க தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.