சாணக்கியன் தமிழ் தேசிய வாதியல்ல: குற்றம் சுமத்தும் பிள்ளையான்(Video)
சாணக்கியன் அரசாங்கத்துடன் இணைந்து அரசியலுக்கு வந்தவர், அவரை தமிழ் தேசிய வாதியென்று நம்புபவர்கள் எதிர்காலத்தில் சிந்தித்து முடிவுகளை எடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட நீர்பாசன திணைக்களத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
இங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எங்களை தொடர்ந்து இழிவுபடுத்தும் செயற்பாடுகளையே முன்னெடுத்துவருகின்றனர்.
குற்றம் சுமத்தும் பிள்ளையான்
அதிலும் சாணக்கியன் அதிகளவான விமர்சனங்களை முன்னெடுத்துவருகின்றார். அவர் அரசாங்கத்துடன் இணைந்து அரசியலுக்கு வந்தவர்.
கவலையான விடயம் என்னவென்றால் அவருடைய தாய் இனத்தவருடன் இணைந்து எங்களது வீடுகளையும் அவர் எரிக்கவந்தார். கிழக்கு பல்கலைக்கழகத்திலுள்ள சகோதர இன மாணவர்களுடன் இணைந்து எங்களது காரியாலயத்தினையும் எரிக்கமுனைந்தார்.
அரசாங்கம் மாறவேண்டும், நாட்டில் மாற்றம் வேண்டும் என்று போராடியபோது சாணக்கியன் மாத்திரம் அவரது அரசியல் எதிரிகளான வியாழேந்திரன், பிள்ளையான் வீடுகளை எரிக்கவேண்டும் என்றும் ஆக்களை கொண்டுவந்து கல்லெறிந்தார்.
இதுதானா ஜனநாயகம் என்பதை அவர்கள் கேட்டுப்பார்க்கவேண்டும். சாணக்கியனும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் இருந்திருக்காவிட்டால் எமது வீட்டுக்கு கல்லு வந்திருக்காது.
இவரை அரசியலுக்கு இழுத்துவந்தவர்கள், இவரை தமிழ்தேசியவாதியென்று நம்புபவர்கள் சிந்தித்து எதிர்காலத்தில்முடிவுகளை எடுக்கவேண்டும் என்பது எனது கோரிக்கையாகும்.” என தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |