அக்கரைப்பற்றில் பெட்ரோல் பதுக்கல்: ஒருவர் கைது(Photo)
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமுனை பிரதேசத்தில் இன்று(30) வீடு ஒன்றிலிருந்து சுமார் 35 லீட்டர் பெட்ரோலுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீட்டை முற்றுகையிட்ட போது அங்கு சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 35 லீட்டர் பெட்ரோல் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம்
பொலிஸ் உளவுத்துறைக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய, அக்கரைப்பற்று பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கைது
இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.