மாவீரர் நாள் தடை உத்தரவு கட்டளையை மீளப்பெறுமாறு மனுத்தாக்கல்

Srilanka Vavniya
By Thileepan Nov 22, 2021 04:38 PM GMT
Report

மாவீரர் நாள் தடை உத்தரவுக் கட்டளையை மீளப்பெறுமாறு கோரி வவுனியா நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்த நிலையில், மன்றினால் எதிர்வரும் புதன் கிழமை வரை வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அரசியல் கைதி செல்வநாயகம் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று மேலும் தெரிவிக்கையில்,

இறந்தவர்களை நினைவு கூர எனக்கு வழங்கப்பட்ட தடை உத்தரவு கட்டளையை மன்று மீளப்பெற வேண்டும் என கோரி சட்டத்தரணி யூஜின் ஆனந்தராஜ் தலைமையில் வவுனியா நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்திருந்தேன்.

வவுனியா மன்றில் இருந்த பல சட்டத்தரணிகளும் தாமாக முன்வந்து குறித்த வழக்கில் ஆஜராகியிருந்தார்கள். தடை உத்தரவில் குறிப்பிடப்பட்டதன் அடிப்படையில் 106 இன் (1), (3), (6)பிரிவின் படி ஆர்ப்பாட்டத்தையும், மாவீரர் தினத்தையும் நடத்துவதை நிறுத்துவதற்கான கட்டளை என வழங்கப்பட்டிருந்தது.

வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் அறிக்கையிலுக்கு அமைய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட அமைப்பு என்றும், இலங்கை சோசலிச குடியரசினால் வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானியில் தடை செய்யப்பட்டது. அந்த அமைப்புக்கு உடந்தையளித்தல், அதனை பிரபல்யப்படுத்துதல் என்பன தடை செய்யப்பட்டுள்ளது.

அந்த இயக்கத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் நினைவாக 21.11 - 27.11 வரை உறுப்பினர்களை இணைத்து மாவீரர் நாள் செய்யவுள்ளதாகவும், இது விரோதமான செயற்பாடு எனவும் சுட்டிக்காட்டி பல்வேறு காரணங்களின் அடிப்படையில் மன்றிடம் இருந்து பொலிஸாரினால் தடை உத்தரவு பெறப்பட்டிருந்தது.

இந்த கட்டளையின் படி நான் குறித்த விடயத்தை கவனத்தில் கொண்டு எமது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் இணைந்து இறந்த உறவுகளுக்கு நினைவு செலுத்த உரிமை இருக்கிறது. அது அடிப்படையான உரிமை என எனது சார்பில் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியிருந்தார்கள்.

தமிழ் மொழியை கையாண்டு இந்த வழக்கை நடத்த தற்போது ஆளணி இல்லை எனவும் மாவீரர் தினத்திற்கு பின் நடத்த குறித்த வழக்கை நடத்த பொலிசார் அனுமதி கோரினர். எமது சட்டத்தரணிகள் அதனை கடுமையாக எதிர்த்தனர். மாவீரர் தினம் முடிந்த பின் தமது கட்சிக்காரருக்கு அவர் கோரும் நிவாரணம் கிடைக்காமல் போய்விடும்.

எனவே இன்றைய தினமே கட்டளை வழங்குமாறு மன்றிடம் கோரினர். குறித்த நிகழ்வு தொடர்பில் கிடைத்த ஆதாரங்களை பொலிஸார் சாட்சிப்படுத்துவதற்காக எதிர்வரும் புதன்கிழமை வரை வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், அன்றைய தினம் மன்று கட்டளை வழங்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US