உயர்நீதிமன்றத்தின் நியாயாதிக்கத்தை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு
உயர்நீதிமன்றத்தின் நியாயாதிக்கத்தை கோரி, சுதந்திர மற்றும் நியாயமான தேர்தல்களுக்கான அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி, மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெடகொட நாடாளுமன்றில் முன்வைத்துள்ள, "தேர்தலை நடத்தாமல், கலைக்கப்பட்ட உள்ளூரட்சி தலைவர்களின் அதிகாரங்களை மீளப்பெற்றுக்கொள்ளும்" யோசனையை சவாலுக்கு உட்படுத்தியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மோசமான முன்னுதாரணம்
முன்மொழியப்பட்டுள்ள இந்த யோசனை, மோசமான முன்னுதாரணத்தை உருவாக்குகிறது எனவும்
இது தேசிய தேர்தல்கள் உட்பட சரியான நேரத்தில் தேர்தல்களை நடத்துவதைத் தடுக்கும் சட்ட கட்டமைப்பை துஸ்பிரயோகம் செய்யும் அபாயத்தை உருவாக்குகிறது எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு அப்பால் நாட்டின் ஒட்டுமொத்த ஜனநாயக அமைப்பின் மீது மக்களுக்கு நம்பிக்கையை இழக்க வழிவகுக்கும் என்று மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |