கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட இருக்கும் இந்திய மாணவர்கள்: விசாரணையில் வெளிவந்த தகவல்
700 இந்திய மாணவர்களை கனடாவிலிருந்து நாடு கடத்தும் நிலையை உருவாக்கியுள்ள முகவர் தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் ஜலந்தரில் அமைந்துள்ள, Brijesh Mishra என்பவர் Education Migration Services என்னும் பெயரில் இந்திய மாணவர்களை வெளிநாடுகளுக்கு கல்விக்காக அனுப்பும் சேவையை செய்து வந்துள்ளார்.
இதன்மூலம் ஒருவருக்கு தலா 16 இலட்ச ரூபாய் வீதம் 700 மாணவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு கல்வி விசாவில் கனடா அனுப்பியுள்ளார்.
அவர்கள் படிப்பை முடித்து நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கோரி விண்ணப்பிக்கும்போதுதான் தாங்கள் அனைவரும் ஏமாற்றப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.
போலியான கடிதங்கள்
அவர்களுடைய அனுமதி ஆஃபர் கடிதங்கள் (admission offer letters) போலியானவை என தெரியவந்ததையடுத்து, அவர்கள் நாடுகடத்தப்பட இருப்பதாக கனடா தெரிவித்துள்ளது.
இந்த விடயம் அம்பலமானதைத் தொடர்ந்து குறித்த முகவர் Brijesh Mishra, அலுவலகத்தை மூடிவிட்டு தலைமறைவாகியுள்ளார்.
இந்நிலையில் அவர் திருட்டுத்தனமாக கடந்த மாதம் கனடாவுக்குள்ளேயே நுழைய முற்பட்ட வேளையில் கனேடிய பொலிஸார் அவரைக் கைது செய்தனர்.
குறித்த சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது 2019இல் அவருடைய விசா ரத்துசெய்யப்பட்டதாகவும் அதனைத்தொடர்ந்து சட்டவிரோதமாக கனடாவில் வாழ்ந்துவந்துள்ளார் என்பதும் தற்போது தெரியவந்துள்ளதாக கனடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
