மதுவரி திணைக்களத்தினரின் விசேட சோதனை நடவடிக்கையின் போது வவுனியாவில் ஒருவர் கைது
மதுவரி திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது 25 சாராய போத்தல்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா, கண்டி வீதியில் உள்ள பிரபல சுப்பர் மார்க்கட் முன்பாக நேற்று இரவு 8.45 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கோவிட் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் நேற்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வவுனியா, கண்டி வீதியில் உள்ள பிரபல சுப்பர் மார்க்கட் ஒன்றிலிருந்து 25 சாராயப் போத்தல்களைக் கொள்வனவு செய்து மோட்டார் சைக்கிளில் வைத்துக் கொண்டு செல்ல முற்பட்ட போது அங்கு திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட மதுவரித் திணைக்கள அதிகாரிகள் 25 சாராயப் போத்தல்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த நபரைக் கைது செய்துள்ளதுடன், சாராய போத்தல்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
குறித்த நபரிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ள மதுவரித் திணைக்கள அதிகாரிகள், அவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan
