இரட்டை யானை குட்டிகளை பார்வையிட வருகைதரும் மக்கள்!
பின்னவல இரட்டை யானைக்குட்டிகளை பார்வையிட தற்போது வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகை தருவதாக பின்னவல யானை சரணாலயத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பின்னவலை யானைகள் சரணாலயத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் யானை ஒன்று இரட்டை குட்டிகளை ஈன்றது. சுரங்கி என்ற பெண் யானைக்கே இந்த இரண்டு ஆண் யானைக் குட்டிகளும் பிறந்தன.
இந்த இரண்டு யானை குட்டிகளில் முதல் குட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி அதிகாலை 04 மணிக்கும் இரண்டாவது குட்டி அந்தரத்தினமே காலை 10 மணிக்கும் பிறந்தது.
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக யானை ஒன்று இரட்டை குட்டிகளை ஈன்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு யானை குட்டிகளும் ஆரோக்கியமாக உள்ளதுடன் தன் தாய் யானையுடன் ஓடி ஆடி விளையாடுவதையம் அவற்றின் குறும்புத்தனத்தை ரசித்து பார்ப்பதற்காகவே பெரும்திரளான மக்கள் வருவதும் குறிப்பிடத்தக்கது.
விபத்து ஏற்பட்டு ரத்த காயத்துடன் வலியில் துடிக்கும் தமிழ், பதறிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam
மகா சங்கமத்தில் ஷாக்கிங் விஷயத்தை பாண்டியனிடம் கூறிய சுரேஷ்... பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகே அழகு சீரியல் Cineulagam