சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 56 பேர் கைது

Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Fuel Crisis
By Badurdeen Siyana Jul 03, 2022 08:56 AM GMT
Report

சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முற்பட்ட 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை ஜமாலியா கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முற்பட்ட 54 பேரை கடற்படையினர் நேற்றிரவு (02)கைது செய்துள்ளனர்.

கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்படையினர்

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 56 பேர் கைது | People Tried Abroad Illegally Were Arrested

கைதானாவர்களில் கடத்தல்காரர்கள் 6 பேர் உட்பட 41 ஆண்களும், 6 பெண்களும் மற்றும் 3 சிறுவர்களும் அடங்குவதாக கடற்படையின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, கம்பஹா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 5 முதல் 56 வயதுக்குட்பட்டவர்களாவர். 

தடுத்து வைப்பு

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 56 பேர் கைது | People Tried Abroad Illegally Were Arrested

கைது செய்யப்பட்டவர்களை தற்போது திருகோணமலை கடற்படை முகாமில் தடுத்து வைத்து வாக்குமூலம் பெற்றுவருவதுடன் இன்று(03) மாலை திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலதிக தகவல்-ராகேஷ்

மாரவில பிரதேசம் 

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக வெளிநாடு செல்வதற்கு தயாராக இருந்த 25 பேர் மாரவில பிரதேசத்தில் நேற்று(02) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் கடற்படையின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில்,“இலங்கை கடற்படை, இலங்கை கரையோர பாதுகாப்பு திணைக்களம் மற்றும் பொலிஸார் இணைந்து நேற்று மாரவில பிரதேசத்தில் நாட்டிலிருந்து சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக செல்வதற்கு தயாராக இருந்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளோம்.

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 56 பேர் கைது | People Tried Abroad Illegally Were Arrested

இவர்களில் 9 ஆண்கள், 6 பெண்கள் மற்றும் 10 சிறுவர்கள் உட்பட 25 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் 25 பேரும் ஒரே வீட்டில் தங்கியிருந்த வேளை கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இவர்கள் மட்டக்களப்பு, வாழைச்சேனை மற்றும் ஹலவத்தை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

25 பேரும் மேலதிக விசாரணைகளுக்காக மாரவில பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்தி-ராகேஷ்

மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US