அநுர ஆட்சியில் தொடரும் நிதி மோசடி..! இம்ரான் எம்.பி வலியுறுத்தல்
அண்மைக் காலங்களாக நிதியமைச்சின் கீழ் உள்ள சில முக்கிய துறைகளில் பதிவாகியுள்ள நிதி மோசடிகள் மற்றும் தொழில்நுட்ப ரீதியான அச்சுறுத்தல்கள் குறித்து திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையானது, நேற்றைய தினம்(13.05.2026) வெளியிடப்பட்டுள்ளது.
மக்களின் வரிப்பணத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமாயின், நிதியமைச்சின் நிர்வாகக் கட்டமைப்பில் உடனடி மாற்றங்கள் அவசியம் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நிதி மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப சவால்கள்
அதில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
புதிய அரசாங்கத்தின் கீழ் மக்கள் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கின்ற நிலையில், நாட்டின் மிக முக்கியமான தூணாக விளங்கும் நிதியமைச்சின் கீழுள்ள நிறுவனங்களில் நிதி மோசடிகள் இடம்பெறுவது துரதிஷ்டமானது.
குறிப்பாக 2.5 மில்லியன் டொலர் நிதி கையாடல் விவகாரம், தபால் திணைக்கள நிதி மோசடி மற்றும் அஸ்வெசும கொடுப்பனவுகளில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் என்பன சாதாரண பொதுமக்களின் வரிப்பணத்துடன் சம்பந்தப்பட்ட விடயங்களாகும்.

ஜனாதிபதி, நிதியமைச்சர் என்ற ரீதியில் பாரிய பொறுப்புகளை சுமந்திருப்பவராவார். எனினும், தற்போதைய சூழலில் நிதியமைச்சுக்கு என முழுநேரத்தையும் ஒதுக்கி அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டிய ஒரு நிலை தேவை.
மேலும், நிதி மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப சவால்களைக் கையாளக்கூடிய ஒரு தனி அமைச்சரின் தேவையும் அவசியமாகின்றது.

நிதியமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு பொறிமுறைகளை மீளாய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
இந்த நோக்கமானது யாரையும் தனிப்பட்ட ரீதியில் தாக்குவதற்காக அல்ல, மாறாக அரசாங்கம் தனது நற்பெயரைத் தக்கவைத்துக் கொள்ளவும், அரச நிதியை முறைகேடுகளில் இருந்து பாதுகாப்பதற்காகவுமே இத்தகைய நிர்வாக மாற்றங்கள் அவசிமாகின்றன.
எனவே, நிதியமைச்சின் பணிகளைத் தடையின்றி முன்னெடுக்கவும், இவ்வாறான மோசடிகள் இனி நிகழாமல் தடுக்கவும் தகுதியான ஒருவரை நிதியமைச்சராக நியமித்து, நிர்வாகப் பலவீனங்களை நிவர்த்தி செய்ய ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam