வறுமையை பழகிக்கொள்ளுங்கள்! இலங்கை மக்களுக்கு ஆளும் தரப்பு உறுப்பினர் அறிவுரை
வறுமையை எதிர்கொள்ள மக்கள் மக்கள் பழகிக்கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பூண்டுலோயா பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். நாடு மாதக் கணக்கில் மூடப்பட்டிருந்தால், நிலைமை இந்தளவுக்கேனும் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.
ஒரு நாள் நாட்டை மூடினால், அரசாங்கத்திற்கு சுமார் 450 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். எதிர்காலத்தில் வரவிருப்பது மிகவும் கஷ்டமான காலம். பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம்.
எரிபொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கலாம். வறுமைக்கு அப்பால் மேலும் பலவற்றை எதிர்நோக்க நேரிட்டுள்ளது. எனினும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்த கஷ்டமான நிலைமையில் இருந்து மீண்டு, மீண்டும் நாட்டை கட்டியெழுப்ப முடியும் என நம்புவதாகவும் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.