நாடளாவிய ரீதியில் நத்தார் பண்டிகையை வரவேற்க தயாராகும் மக்கள்
கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக நத்தார் பண்டிகை காணப்படுகிறது.
அந்தவகையில் இன்று நள்ளிரவு இயேசு பாலன் பிறப்பினை கொண்டாட உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் தயாராகி வருகின்றனர்.
இதனை முன்னிட்டு பல பகுதிகளில் நத்தார் பண்டிகை குடில்கள், சவுக்குமரக் கிளைகள், புத்தாடைகள், பட்டாசுகள், அலங்காரப் பொருட்கள் என்பவற்றை மக்கள் கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் நத்தார் பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர்.
மட்டக்களப்பு நகருக்கு பெருமளவான மக்கள் வருகை தந்து நத்தார் பண்டிகைக்கான பொருட்கொள்வனவில் ஈடுபட்டு வருவதுடன், கரோல் கீதங்கள் இசைக்கப்பட்டு மக்களை மகிழ்விக்கும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
இதன்போ நாடு மிக விரைவில் மீண்டுவர பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்டன.



செய்தி - குமார்
மலையகம்
நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஹட்டனில் வர்த்தக நிறுவனங்களில் மக்கள் கூட்டம் சாதாரண அளவில் காணப்பட்டமை காணக்கூடியதாக இருந்தது.
இதேவேளை நத்தார் தினத்தினை முன்னிட்டு வீடுகளில் மாட்டுத்தொழுவம் அமைத்து அலங்கரிக்கபட்ட நத்தார் மரங்கள் போன்றன அமைத்து வீடுகளை அலங்கரித்து வருகின்றனர்.
இன்று நள்ளிரவு 12 மணியளவில் ஹட்டன் திருச்சிலுவை ஆலயத்தில் இயேசு பிரானின் பிறப்பினை நினைவு கூர்ந்து விசேட தேவ ஆராதனைகளும் இடம்பெறவுள்ளன.
நத்தார் ஆராதனையை முன்னிட்டு ஹட்டன் மற்றும் நுவரெலியா பிரதேசங்களில் உள்ள தேவாலயத்தில் விசேட பாதுகாப்பு வழங்க ஏற்பாடுகள் செய்துள்ளனர் .




செய்தி - திருமாள், திவா
கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு பாதுகாப்பு
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் விசேட பாதுகாப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான கிறிஸ்மஸ் நள்ளிரவு ஆராதனை புளியந்தீவு மரியாள் தேவாலயத்தில் மட்டுமறை மாவட்ட ஆயர் தலைமையில் இடம்பெறஉள்ளது.
இதேவேளை மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்புரைக்க அமைவாக விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.




கார்க் தீவில் அமெரிக்க இராணுவத்திற்கு காத்திருக்கும் பேராபத்து - ட்ரம்பிற்கு ஈரான் புகட்டப்போகும் வரலாற்றுப் பாடம்
டிரம்பை உன்னிப்பாகக் கவனிக்காத இலங்கை அரசாங்கம்! மூடப்படும் நிலையில் தொழிற்சாலைகள் - பகிரங்க குற்றச்சாட்டு