முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன, அக்காலப் பகுதியில் நாடாளுமன்றத் தேர்தலைக்
காலந்தாழ்த்தியமையாலேயே வடக்கு மக்கள் தமிழீழ விடுதலைப்புலிகளை
மாற்றுவழியாக தெரிவு செய்யும் சூழல் ஏற்பட்டதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தலை நடத்தவில்லை என்றால் மக்கள்
மாற்றுவழிகளை தெரிவு செய்வார்கள் எனவும் அரசாங்கத்துக்கு அவர் எச்சரித்துள்ளார்.
தேர்தலை நடத்த பணமில்லை என்கிறார்கள், இதனாலேயே தேர்தல் நடத்த வேண்டும்
என நாம் கூறுகிறோம் என தெரிவித்துள்ளார்.
சோமாலிய கடற்கொள்ளையர்கள் கப்பலைக் கைப்பற்றியது போல
அரசாங்கத்தை கொள்ளையர்கள் கைப்பற்றியுள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலைநேர செய்திகளின் தொகுப்பு,