சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்திய குரல் பதிவுக்கு எதிராக தமிழர் பகுதியில் போராட்டம்
அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் தொடர்பில் விரும்பத்தகாத கருத்துக்களை தெரிவித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டமானது, இன்று(17.08.2026) வடமாகாண சபையின் முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
சர்ச்சையை தூண்டிய குரல் பதிவு
வடக்கில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் தொடர்பில், வடக்கில் முக்கிய பொறுப்புக்களில் உள்ள அதிகாரிகள் சிலர் கூடி விரும்பத்தகாத கருத்துக்களை தங்களிடையே பகிர்ந்து கொண்டமை தொடர்பிலான ஒலி பதிவு சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தன.

குறித்த ஒலிப்பதிவில் , உள்ள குரல்கள் தொடர்பில் ஆய்வு செய்து , அந்த குரல்களுக்கு உரிய அதிகாரிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.
நேரில் சந்தித்த எம்.பி
இந்த நிலையில், சுகவீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வடமாகாண அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் , வடமாகாண சபையின் முன்பாக கண்டன போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் நேரில் சந்தித்து , அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து கொண்டார்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனுக்கும் வடமாகாண ஆளுநர் ஊடாக ஜனாதிபதிக்கும் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் மனு ஒன்றையும் கையளித்துள்ளனர்.

இலங்கைக்கு இழுத்துவரப்பட்ட ஷிரான் பாஸிக் தொடர்பில் திடுக்கிடும் தகவல் : பொலிஸார் விடுத்துள்ள தகவல்கள்
வவுனியாவில் திரண்ட போராட்டக்காரர்கள்
அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை களங்கப்படுத்திய அரச அதிகாரிகளுக்கு எதிராக வவுனியா மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சுகவீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டதுடன், கண்டன போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர்.
இந்த போராட்டமானது, வவுனியா மாவட்டசெயலகம் முன்பாக இன்று (17.08.2026) காலை முன்னெடுக்கப்பட்டது.
குறித்த விடயம் தொடர்பாக வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் கைதடியில் உள்ள வடமாகாண சபை அலுவலகத்தின் முன்பாக பாரிய போராட்டம் ஒன்றை மேற்கொண்டது.

அதற்கு வலுச்சேர்க்கும் வகையில் வவுனியாவிலும் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஆதங்கத்தை கொட்டிய அதிகாரிகள்
இதன்போது கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள்,
"வட மாகாணத்தில் பொறுப்பு வாய்ந்த பதவியில் இருக்கக் கூடியவர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்களை மிகவும் தரக்குறைவாக, இழிவான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தி பாரிய களங்கத்தை ஏற்படுத்துகின்ற ஒரு செயற்பாட்டினை செய்திருக்கிறார்கள்.
அரச சேவையில் இருந்து கொண்டே அந்த கட்டமைப்பிற்குள் இருக்கின்ற இன்னுமொரு சேவையினை மலினப்படுத்தும் விதமாக பேசியுள்ளனர்.
இதற்கு எமது கண்டனத்தை தெரிவிப்பதுடன் உடனடியாக அவர்கள் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்" என்றார்கள்.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரச சேவையில் பதவியை விட பரஸ்பர மரியாதையே முக்கியம், சேவையில் அவமதிப்பு வேண்டாம், நாங்கள் எடுப்பார் கைப்பிள்ளைகளா போன்ற வாசகங்களை தாங்கியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
இதேவேளை, தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்றையும் மாவட்ட அரச அதிபர் பீ. ஏ. சரத்சந்திரவிடம் கையளித்துள்ளனர்.
மேலதிக தகவல் - திலிபன்
நல்லூர் கந்தசுவாமி கோவில் | கொடியேற்றம்