ஓய்வூதியம் இடைநிறுத்தப்படும்! இலங்கையில் ஓய்வூதியம் பெறுவோருக்கு முக்கிய அறிவிப்பு
இலங்கையில் ஓய்வூதியம் பெறுவோருக்கு முக்கிய அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி அடுத்த வருடம் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் ஆயுள் காப்புறுதி தரவு முறையை புதுப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அவ்வாறு புதுப்பிக்காத ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் இடைநிறுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எழுத்து மூலம் அறிவிப்பு
இந்த விடயத்தை ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் ஜகத் டி. டயஸ் அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
அத்துடன் ஓய்வூதியம் பெறுவோரின் வாழ்க்கைச் சான்றிதழை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பது குறித்து கிராம அதிகாரிகளுக்கு பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அறிவுறுத்தல் விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
