யாழில் பல்பொருள் அங்காடி வர்த்தகருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
முறையான அனுமதியின்றி உணவுப் பொருளை இறக்குமதி செய்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் வர்த்தகர் ஒருவருக்கு 12 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து நாட்டில் இருந்து முறையான இறக்குமதி அனுமதியின்றி உணவு உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்து, யாழில் உள்ள பல்பொருள் அங்காடிகளுக்கு விற்பனை செய்வதற்கு பொருட்களை வழங்கிவந்த நபர் ஒருவருக்கு எதிராக மானிப்பாய் பொது சுகாதார பரிசோதகரினால் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் வியாழக்கிழமை வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது சந்தேகநபர் குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து, அவரை எச்சரித்த மன்று, 12 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |