இலங்கையில் இருந்து 5 நாடுகளுக்கான பயணிகள் விமான சேவைகள் நிறுத்தம்
இலங்கையில் இருந்து 5 நாடுகளுக்கு விமானம் ஊடாக பயணிகளை அழைத்து செல்லும் நடவடிக்கை இன்று அதிகாலை முதல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, ஐக்கிய அரபு எமீரகத்தின் டுபாய் மற்றும் சார்ஜா பிராந்தியங்கள், சிங்கபூர், இத்தாலி, பிலிப்பைன்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு விமான பயணிகளை அழைத்து செல்லும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. எனினும் அந்த நாடுகளில் இருந்து தொடர்ந்து இலங்கைக்கு விமான பயணிகள் வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விமான பயணிகளை அழைத்து செல்வது நிறுத்தப்பட்டுள்ள நாளில் தொடர்ந்து பொருட்களை ஏற்றி வரும் விமானங்கள் இலங்கையில் இருந்து வருவதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
ராஷ்மிகா திருமணத்திற்கு யாரெல்லாம் வராங்க தெரியுமா! கெஸ்டுக்கு போடப்பட்ட முக்கிய கண்டிஷன் Cineulagam
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam