இலங்கையில் இருந்து 5 நாடுகளுக்கான பயணிகள் விமான சேவைகள் நிறுத்தம்
இலங்கையில் இருந்து 5 நாடுகளுக்கு விமானம் ஊடாக பயணிகளை அழைத்து செல்லும் நடவடிக்கை இன்று அதிகாலை முதல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, ஐக்கிய அரபு எமீரகத்தின் டுபாய் மற்றும் சார்ஜா பிராந்தியங்கள், சிங்கபூர், இத்தாலி, பிலிப்பைன்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு விமான பயணிகளை அழைத்து செல்லும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. எனினும் அந்த நாடுகளில் இருந்து தொடர்ந்து இலங்கைக்கு விமான பயணிகள் வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விமான பயணிகளை அழைத்து செல்வது நிறுத்தப்பட்டுள்ள நாளில் தொடர்ந்து பொருட்களை ஏற்றி வரும் விமானங்கள் இலங்கையில் இருந்து வருவதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri