”முள்ளிவாய்க்கால்” ஊடகவியலாளர் மீது தாக்குதல் நாடாளுமன்றில் கேள்வி (VIDEO)
”முள்ளிவாய்க்கால்” பகுதியில் பெயர் பலகையை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர் மீது படையினர் நடத்திய தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் இது தொடர்பில் இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த ஊடகவியலாளரை போன்று காலி அல்லது மாத்தறையில் ஊடகவியலாளர் ஒருவர் படையினரால் தாக்கப்பட்டிருந்தால், அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமல் இருந்திருக்குமா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இந்தநிலையில் கண்துடைப்பாக தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 3 படையினர், பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் நிர்மலநாதன் குறிப்பிட்டார்.