ரிசாத் தொடர்பான வழக்கு விசாரணைகளை உன்னிப்பாக அவதானித்து வரும் நாடாளுமன்ற சங்கம்
இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் தொடர்பான வழக்கு விசாரணைகளை அனைத்து நாடாளுமன்ற சங்கம், உன்னிப்பாக அவதானிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ரிசாத் பதியுதீன் இறுதியாக பிணையில் அனுமதிக்கப்பட்டமை மகிழ்ச்சியளிப்பதாக நாடாளுமன்ற சங்கம் குறிப்பிட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் மற்றும்16 வயதான வீட்டுப்பணியாள் ஒருவரின் மரணம் என்பன தொடர்பில் பதியுதீன், தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல்தாரிகளுக்கு உதவியளித்தார் என்ற குற்றச்சாட்டும் அவர்
மீது சுமத்தப்பட்டிருந்தது.