அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை மேலும் குறைகிறது (Video)
பண்டிகைக் காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பலவற்றின் விலைகளை மேலும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமென வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இறக்குமதியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுகின்றபோதும் இதன் மூலமான நன்மைகள் நுகர்வோரான மக்களுக்கு கிடைக்குமென தெரிவித்த அவர், இறக்குமதியாளர்களுக்கான பாதிப்பு பின்னர் நிவர்த்தி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி தெரிவித்த அவர், நாட்டில் தற்போது அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைந்துள்ளன. அவற்றை மேலும் குறைப்பதற்கு எதிர்வரும் வாரங்களில் நடவடிக்கை எடுக்க முடியும்.
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைவடையும் போது இறக்குமதியாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.
எனினும், எதிர்காலத்தில் அவர்கள் இறக்குமதி செய்யவுள்ள பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட்டு, நிவாரணங்களை வழங்க முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தி குறித்தும், இன்றைய தினம் இலங்கை பத்திரிகைகளில் வெளியான முக்கிய செய்திகளை உள்ளடக்கியும் வருகின்றது இன்றைய எமது பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,
குடும்பத்தினரைப் பார்க்காமல் நான்கு ஆண்டுகள்... வெளிநாட்டில் கோர விபத்தில் சிக்கிய ஆசிய இளைஞர் News Lankasri
10-வது சர்வதேச அனிமே விருது விழாவில் நடிகை ராஷ்மிகா மந்தனா.. இந்திய சினிமாவிற்கு கிடைத்த கௌரவம் Cineulagam
செவ்வாய் - குரு உருவாக்கும் திரிஏகாதச யோகம்... ஜூன் மாதத்தில் இந்த ராசிகளுக்கு பணமழை உறுதி! Manithan