அடுத்த வாரத்திலிருந்து புதிய கட்டுப்பாடுகள்! நாட்டை திறப்பது குறித்து வெளியான அறிவிப்பு
கோவிட் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான தற்போதைய முன்னேற்றங்களின் அடிப்படையில் நாடு விரைவில் திறக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா நேற்றைய தினம் அறிவித்துள்ளார்.
நாடு அடுத்த வாரம் மீண்டும் திறக்கப்பட்டால் விதிக்கப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து தெரியப்படுத்துமாறு இலங்கை ஜனாதிபதி கேட்டாபய ராஜபக்ஷ கோவிட் ஒழிப்பு செயலணிக்கு அறிவுறுத்தியுள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.
எனவே அடுத்த வாரத்திலிருந்து புதிய கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ளதாகவும், புதிய கட்டுப்பாடுகளுடன் நாட்டை திறக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைககளின் கண்ணோட்டம்,