பாகிஸ்தான் அணியிடம் இலங்கை படுதோல்வி
பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கை படுதோல்வியடைந்துள்ளது.
இன்றைய தினம் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான போட்டியிலும் இலங்கை அணி தோல்வியைத் தழுவியுள்ளது.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய இலங்கை அணி 45.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 211 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.
இதில் சதீர சமரவிக்ரம 48 ஓட்டங்களையும் குசால் மெண்டிஸ் 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்து வீச்சில் பாகிஸ்தான் அணியின் சார்பில் மொஹமட் வசீம் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 44.4 ஓவர்களில் விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கினை எட்டியது.
இதில் மொஹமட் ரிஸ்வான் ஆட்டமிழக்காது 61 ஓட்டங்களயும் பகர் ஸமான் 55 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்து வீச்சில் மைக்கல் வென்டர்சே மூன்று விக்கெட்களை வீழ்த்தினார்.
இதன்படி பாகிஸ்தான் அணி மூன்றுக்கு பூச்சியம் என்ற கணக்கில் இலங்கைக்கு எதிரான சர்வதேச ஓருநாள் தொடரை வெள்ளையடிப்புச் செய்து வெற்றியீட்டியுள்ளது.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 18 மணி நேரம் முன்
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
பண பிரச்சனையை தீர்த்த அண்ணாமலை, ஆனால் கடைசியில் மனோஜ்-ரோஹினிக்கு ஷாக்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan