ட்ரம்பின் தொடர் கோரிக்கை.. பாகிஸ்தான் வெளியிட்ட தகவல்
ஓபரேஷன் சிந்தூரில் போர்நிறுத்தத்தில் அமெரிக்காவின் தலையீடு குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி நடைபெற்ற பஹல்ஹாம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மே 7ஆம் திகதி ஓபரேஷன் சிந்தூர் என்ற இராணுவ நடவடிக்கையை, இந்தியா பாகிஸ்தானில் மேற்கொண்டது.
இதில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள் தாக்கியழிக்கப்பட்டது. இதன் காரணமாக, இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இரு நாடுகளும், ட்ரோன் மற்றும் விமானங்கள் மூலமாக தாக்கிக்கொண்டன.
போர் நிறுத்தம்
4 நாட்களுக்கு இந்த போர் பதற்றம் நீடித்த நிலையில், மே 10ஆம் திகதி போர் நிறுத்தம் செய்வதாக இரு நாடுகளும் அறிவித்தன.
தன்னுடைய மத்தியஸ்தம் காரணமாகவே இந்த போர் நிறுத்தம் நடைபெற்றது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.
பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதாலே போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டோம், இதில் மூன்றாம் நாடுகளின் தலையீடு இல்லை என ட்ரம்பின் கூற்றை இந்தியா மறுத்து வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானும் ட்ரம்ப்பின் கூற்றுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் டார், "நாங்கள் அமெரிக்கா உள்ளிட்ட எந்தவொரு நாட்டையும் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய சொல்லவில்லை.
போர் நிறுத்த கோரிக்கை பாகிஸ்தானிடமிருந்தே வந்தது. காஷ்மீர் உள்ளிட்ட நிலுவையில் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் இந்தியா உடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



