முல்லைத்தீவு மாவட்டத்தில் நெல் கொள்வனவு ஆரம்பம்
விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் நிர்ணய விலையில் நெல்லைக் கொள்வனவு செய்துவருகின்றது.
இதன் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நெல் கொள்வனவு நேற்றையதினம்(15.07.2026) முள்ளியவளை கமநல சேவே நிலய நெல் களஞ்சியசாலையில் நெல் சந்தைப்படுத்தல் சபையினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
நெல் வகைகள்
சிவப்பு நாடு - 120 ரூபாய்
வெள்ளை நாடு- 120 ரூபாய்
சம்பா - 130 ரூபாய்
கீரிச்சம்பா - 140 ரூபாய்க்கும் கொள்வனவு செய்யப்படுகின்றது.

ஒரு விவசாயிடம் இருந்து 2500kg நெல் கொள்வனவு செய்யப்படுகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது முள்ளியவளை கமநல சேவை நிலையத்தின் நெல் களஞ்சிய சாலையிலும், முற்றிப்பு நெல் களஞ்சிய சாலையிலும் நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 2800 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது.



