சுகாதார சீர்கேட்டுடன் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்த உரிமையாளரிற்கு தண்டம்
உடையார்கட்டு பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்த உரிமையாளரிற்கு சுமார் நாற்பது ஆயிரம் தண்டம் விதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று (20.06.2025) இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட உடையார்கட்டு பகுதி, புதுக்குடியிருப்பு மற்றும் வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள பிரபல விற்பனை நிலையங்கள் மீது திடீர் சோதனை ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
உரிய நடவடிக்கை
அத்தோடு மருத்துவ சான்றிதழ் இல்லாமை, உணவு வளாகங்கள் தொப்பி ஆப்ரான் இல்லாமை, முகச்சுவரம் செய்யாமை, தண்ணி பகுப்பாய்வு சான்றிதல் இன்மை, கழிவு தொட்டி இன்மை, அனுமதி பெறப்படாது இயங்கிய விற்பனை நிலையம் உரிமையாளர்களிற்கு எதிராக நேற்று மேலதிக நீதவான் நீதிமன்றில் உடையார்கட்டு பொது சுகாதார பரிசோதகர் பிரதாஸினால் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் குறித்த வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.
இதன்போது உரிமையாளர்களை குற்றவாளியாக இனங்கண்ட நீதிமன்றம் 40000 ரூபா தண்டம் விதித்ததுடன் கடுமையான எச்சரிக்கையும் வழங்கப்பட்டிருந்தது.
குறித்த சோதனை நடவடிக்கையில் உடையார்கட்டு பொது சுகாதார பரிசோதகர் பிரதாஸ், வள்ளிபுனம் பொது சுகாதார பரிசோதகர் றொய்ஸ்ரன் ஜோய் ஆகியோர் இணைந்து மேற்காெண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.









ஈழத் தமிழர் இனி செய்யவேண்டியது என்ன! 6 மணி நேரம் முன்

பெட்ரோல் நிலையத்தில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல.., நீதிமன்றம் உத்தரவு News Lankasri
