108 நாட்கள் அகழ்வில் 500ஐ கடந்த எலும்புக்கூடுகள் - இன்றும் புதிதாக 9 எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 54ஆவது நாளான இன்றைய தினம் திங்கட்கிழமை 10 என்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
அத்துடன், அடையாளம் காணப்பட்ட 10 என்புக்கூடுகளில் 09 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில், செம்மணியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட 108 நாட்கள் அகழ்வு பணிகளின் போது, 572 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதேவேளை, இதுவரையில் அடையாளம் காணப்பட்ட 565 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.



பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepan அவரால் எழுதப்பட்டு, 17 August, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.