ஒட்டுசுட்டான் தானாதோன்றி ஈஸ்வர ஆலயத்தில் சித்திரை புத்தாண்டு பூஜை வழிபாடுகள்
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வர ஆலயத்தில் குரோதி வருட சித்திரை புத்தாண்டு பூஜை வழிப்பாடுகள் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
குறித்த பூஜை வழிப்பாடுகள் கடந்த 13 ஆம் திகதி இரவு 8 மணியளவில் கீர்த்தி வாசக்குருக்கள் தலைமையில் நடைபெற்றுள்ளன.
பூஜை வழிபாடுகள்
இதன்போது பக்தர்கள் பலர் பூஜை வழிப்பாடுகளில் கலந்து கொண்டு குரோதி வருடத்தினை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து காலை(14) நடைப்பெற்ற பூஜை வழிபாடுகளையடுத்து எம்பெருமான் பூலோகநாயகி சமேதராக உள்வீதி வெளிவீதி வலம் வந்துள்ளார்.
மேலும் காலை இடம்பெற்ற பூஜைவழிபாடுகளில் அதிகளவான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.