தமிழர்கள் மூவருக்கு வழங்கப்பட்டுள்ள நியமனம்: வெளியானது அதிவிசேட வர்த்தமானி (PHOTO)
நாட்டில் கடந்த சில நாட்களாக சர்ச்சை நிலையை ஏற்படுத்தியிருந்த “ஒரே நாடு - ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணிக்கு தமிழர்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நியமனம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவினால் (P. B. Jayasundera) வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி ராமலிங்கம் சக்கரவர்த்தி கருணாகரன் (Ramalingam Chakkarawarthi Karunakaran), யாழ். மாநகர முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா (Yogeswari Patkunarajah) மற்றும் ஐயம்பிள்ளை தயானந்த ராஜா (Iyampillai Dayanandarajah) ஆகியோருக்கே நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
11 உறுப்பினர்களைக் கொண்ட “ஒரே நாடு - ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணியில் தமிழர்கள் யாருக்கும் இடம் வழங்கப்பாடமை தொடர்பில் கடந்த சில நாட்களாக பல தரப்பினராலும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri