யாழில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட இருவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கட்டளை (Photos)
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யாழ்ப்பாண வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 2 பேரை யாழ். நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த கட்டளையை பொலிஸார் இன்று (27.01.2023) சம்பந்தப்பட்டவர்களிடம் வழங்கியுள்ளனர்.
கடந்த பொங்கல் தினத்தன்று ஜனாதிபதி ரணிலின் யாழ்ப்பாண வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதி வழிப்போராட்டம் இடம்பெற்றுள்ளது. பொலிஸார் அதை தடுக்க முற்பட்டபோது அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கட்டளை
இதனையடுத்து, கடந்த 17 ஆம் திகதி தவத்திரு வேலன் சுவாமிகள் குறித்த கூட்டத்தில் கலந்துகொண்ட காரணத்தை முன்வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் 31 ஆம் திகதி தவணையிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க வவுனியா மாவட்ட செயலாளர் சிவானந்தன் ஜெனிட்டா மற்றும் யாழ் பல்கலைக்கழக மாணவன் மனோகரன் சோம்பாலன் ஆகிய இருவரையும் யாழ்ப்பாண நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்ரவிடப்பட்டுள்ளது இவர்களுக்கு, எதிராக 3 குற்றச்சாட்டுக்கள் பொலிஸாரால் முன்வைக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோதமான முறையில் கூட்ட உறுப்பினராக இருந்தமை, பொலிஸ் உத்தியோகத்தர்களின்
கடமைக்கு இடையூறு செய்தமை, கல்லால் எறிந்து பொலிஸ் உத்தியோகத்தருக்கு காயம்
ஏற்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
