இந்தியாவிற்கு வழங்காமல் சீனாவிற்கு வழங்கினால் எதிர்ப்பு நிச்சயம்! எச்சரிக்கும் அடைக்கலநாதன்
மன்னார் கடற்பரப்பில் இயற்கை எரிவாயு மற்றும் எரிபொருள் வளத்தை கண்டறிவதற்கான ஆய்வுப்பணிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அதனை விடுத்து சீனாவிற்கு இந்த வாய்ப்பினை வழங்குமிடத்து, அரசாங்கம் அந்த பகுதி மக்களின் எதிர்ப்பினை எதிர்கொள்ள வேண்டியேற்படும் என அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தின், எரிசக்தி அமைச்சிக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார் .
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,