பிரதமரை இரகசியமாக சந்தித்து பேசியுள்ள எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழு!
அரசியலமைப்பின் 20வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த எதிர்க்கட்சியில் உள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அரச நாடாளுமன்ற குழு கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளது.
கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு கடந்த 18ம் திகதி இடம்பெற்றுள்ளது.
கூட்டத்தின் முடிவில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், நிதியமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர கரியவாசம் ஆகியோருடன் வெளியேறியதை காணமுடிந்ததாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, எதிர்க்கட்சியில் இருக்கும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பிரதமரை நேற்று இகசியமாக சந்தித்து பேசியுள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

முன்னணி குளவிக் கூட்டுக்குக் கல்லெறிகின்றதா? 2 நாட்கள் முன்

பாதியில் நின்றுபோன திருமணம்.. முன்னாள் காதலி ராஷ்மிகாவிற்கும் தனக்கும் தற்போது இதுதான் உறவு என கூறிய நடிகர் Cineulagam

கனடாவுக்குச் செல்லவேண்டாம்... பிரித்தானியா அல்லது அமெரிக்காவுக்குச் செல்ல சர்வதேச மாணவர்களுக்கு ஆலோசனை News Lankasri

பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறிய கனடா... ஜஸ்டின் ட்ரூடோவை கடுமையாக விமர்சித்த இலங்கை அமைச்சர் News Lankasri
