அரசாங்கத்தை கவிழ்க்க சூழ்ச்சி செய்யப்படுவதாக குற்றச்சாட்டு
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கவிழ்க்க சூழ்ச்சி செய்யப்படுவதாக அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் பணத்தைக் கொள்ளையிட்ட மக்களை நெருக்கடிக்குள் ஆழ்த்திய அரசியல்வாதிகளுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் போது இவ்வாறு சதித் திட்டம் தீட்டப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு மோசடிகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த சூழ்ச்சித் திட்டத்தில் அவர்களினால் வெற்றி பெற முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பக்கமே பொதுமக்கள் இருக்கின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள் குற்றம் இழைப்பதாகவும் காணிகளை அபகரிப்பதாகவும் அவர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படாது என்ற நிலைப்பாடு மக்கள் மத்தியில் நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் மக்களின் சொத்துக்களை கொள்ளையிட்டவர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் என அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.




