பிணையில்லா கடன்கள்: மக்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் - எச்சரிக்கும் பொலிஸார்
கையடக்கத் தொலைபேசிகள் ஊடாக எந்தவொரு பிணையும் இல்லாமல் உடனடி கடன்களைப் பெறும்போது பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது.
கணிசமான எண்ணிக்கையிலான நிறுவனங்கள் தற்போது கடன் திட்டங்களை ஒன்லைனிலும் மொபைல் போன் தளங்கள் மூலமாகவும் விளம்பரப்படுத்தி வருவதாகவும், பெரும்பாலும் இந்த சலுகைகளை கவர்ச்சிகரமான முறையில் வழங்குகின்றனர்.
மோசடி கடன் நடைமுறைகள் குறித்த முறைப்பாடுகள் அதிகரித்து வருவதாவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தகைய கடன்களைப் பெற்ற பிறகு பல தனிநபர்கள் கடுமையான நிதி சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.
பல சந்தர்ப்பங்களில், கடன் வாங்குபவர்கள் எதிர்பாராத விதமாக மிக அதிக வட்டி விகிதங்களை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளாகின்றனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கூட்டு விசாரணை
மேலும், இந்த நிறுவனங்கள் கடன் வாங்குபவர்களைத் துன்புறுத்துவது மற்றும் பணம் செலுத்துவதில் தாமதம் செய்பவர்களை அவமானப்படுத்த சமூக ஊடக தளங்களில் அவதூறான பதிவுகளை இடுவது போன்ற நெறிமுறையற்ற வசூல் நடைமுறைகளில் மீண்டும் மீண்டும் ஈடுபடுவதாகவும் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் வந்துள்ளன.
இவை தொடர்பில் மத்திய வங்கியின், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் மேற்பார்வைத் துறையுடன் பொலிஸார் கூட்டு விசாரணையை நடத்துகின்றனர்.
டிஜிட்டல் தளங்கள் மூலம் கடன்களை வழங்கும் பல நிறுவனங்கள் மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்படவில்லை. அத்தகைய நிறுவனங்களை முறையான ஒழுங்குமுறை மேற்பார்வைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
எனவே, இதுபோன்ற சட்டவிரோத நிறுவனங்கள் மூலம் ஏற்படக்கூடிய சுரண்டல் மற்றும் நிதி இழப்புகளைத் தவிர்க்க, மத்திய வங்கியால் முறையாக ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மட்டுமே நிதிச் சேவைகளைப் பெறுமாறு பொலிஸார் பொதுமக்களை வலியுறுத்துகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பார்கவி-தர்ஷனுக்கு தல தீபாவளி ஏற்பாடு செய்யும் நந்தினி, ஆனால்?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

தீபாவளி பரிசாக வந்த விவாகரத்து நோட்டீஸ்.. சின்ன மருமகள் நடிகையின் அதிரடி- கணவர் உடைத்த ரகசியம் Manithan
