திருகோணமலை மாவட்ட செயலகத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட கலந்துரையாடல்
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்கள் அரசாங்க அதிபராக கடமையை பொறுப்பேற்று ஒரு வருட கால பூர்த்தியை முன்னிட்டு "உங்களுடன் ஒரு வருடம்" என்ற தலைப்பின் கீழ் மாவட்ட செயலகத்திலுள்ள அனைத்து உத்தியோகத்தர்களுக்குமான விசேட கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கூட்டமானது இன்று (29) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
சிறப்பு விடயங்கள்
கடமைகளுக்கிடையே செய்யப்பட்டும் சிறப்பு விடயங்கள், மேம்படுத்தப்பட வேண்டிய பகுதிகள், ஒன்றினைந்து வேலை செய்யும் வாய்ப்பு, அரசாங்கத்தின் எதிர்பார்ப்புகள், உண்மையான நிலைமை, மிக முக்கியமாக மத்தியஸ்தம், உந்துதல், தியானம், இடம்பெயர்வு போன்ற பல விடயங்கள் இதன்போது மாவட்ட அரசாங்க அதிபரினால் எடுத்து கூறப்பட்டது.
இதன்போது மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |